திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தினக்கூலி அடிப்படையில் பணிபுரிய காவலாளி (Watchman) பணியிடம் நிரப்பப்பட உள்ளதால் நேர்காணலில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
பணியின் பெயர் : காவலாளி (Watchman)
கல்வித்தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி
அனுபவம் : வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது : 21 முதல் 42 வயதிற்குட்பட்டவராக இருத்தல்
வேண்டும்.
மேற்கண்ட பணியிடம் மிஷன் வாத்சல்யா வழிகாட்டுதலின்படி, தினக்கூலி அடிப்படையிலான பணியிடமாகும்.
இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாகக் கொண்டு எவ்விதத்திலும் அரசுப் பணி கோர இயலாது.
மேலும் மேற்கண்ட பணியிடத்திற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்கள் அனைத்து கல்விச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, அனுபவச்சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் 09/11/2024 ஆம் தேதி காலை 10.00 மணியளவில்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அறை எண்: 705,
7வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்
என்ற முகவரிக்கு நேரில் வந்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய |
|
கருத்துரையிடுக