கீரைகளினால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி அறிய…!

கீரைகளினால் நம் உடலுக்கு  ஏற்படும் நன்மைகளை  பற்றி அறிய…!

 

 


கீரை வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள்

விலை மலிவான   சாதாரணமாக  கிடைக்க்க்கூடிய  பொருட்களில் நிறைய பலன்களைப் பெற முடியும். அந்த வகையில் கீரைகள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கீரை வகைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் எடுத்து கொண்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள் நம் வீட்டில்  உள்ள முதியோர்கள். அவற்றில்  சில முக்கிய கீரைகளின் பயன்களை அறியலாம் நண்பர்களே!

 

அரைக்கீரை:




·         தினமும் சாப்பிட கூடிய கீரைகளில் இது முதன்மையானது.

·         கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நல்ல நிலையில் பாதுக்காக்க உதவுகிறது.

·         பிரசவமான மகளிரும் அரைக்கீரை உண்பதால் சிறந்த ஊட்டத்தை அளிக்கிறது.


மணத்தக்காளி கீரை:


·       இது அல்சர்  இருப்பவர்களுக்கு இது ஒரு அற்புத மருந்து.

·         வாரம் இரண்டு தடவை உட்கொள்ளலாம்.

·         வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்குக் கண்கண்ட சஞ்சீவி. மூலநோய், குடல் நோய் ஆகியவற்றிற்கு இது மருந்தாக செயல்படுகிறது.

பசளைக்கீரை:



·         மலச்சிக்கலை வராமல் தடுக்கிறது. ஆண்மையைப் பலப்படுத்துகிறது.

·         உடலில் உள்ள உஷ்ணத்தை  குறைத்து குளிர்ச்சி தரும்.

·         இக்கீரையை ஆஸ்துமா  நோய்  உள்ளவர்கள் வெயில் காலங்களில் மட்டும் உண்ண வேண்டும்.

 

வெந்தியக்கீரை:




·         வாயுவைக் கட்டுப்படுத்துகிறது.

·         கல்லீரலைச் சுறுசுறுப்பக்கிறது.

·         புரதம், தாதுக்கள், வைட்டமின் சி இதில் நிறையவே உள்ளது.
வாரத்தில் ஒரு முறை உட்கொண்டால் மூட்டுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை பிரச்சனைகளை சரி செய்கிறது.

·         சிறுநீர் கோளாறு வராது.

முளைக்கீரை:




·         தினமும் உண்ணக்கூடிய கீரைகளில் இதுவும் ஒன்று.

·         அனைத்து வயதினரும் உண்ணலாம்.

·         நல்ல பசியைத் தூண்டுகிறது.

·         காச நோயின் போது வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது.

அகத்திக்கீரை:


·         இதில் வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளது.

·         விஷங்களை முறிக்கும் தன்மை கொண்டது.

·         கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.

·         கிருமிகளைக் கொல்லுகிறது
ஆனால், வயிற்றில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் மற்றும் வயதானவாகள் இக்கீரையை உண்ணப்பதை தவிர்க்கவும்.மாதம் ஒரு முறை உண்ணலாம்.

 

கரிசலாங்கண்ணி கீரை:



·         வள்ளலாரால் அவர்களால் போற்றப்பட்ட கீரை வகை இதுவும் ஒன்று. இது கல்பத்திற்கு இணையானது என்று கூறியுள்ளர்.

·         கபம், பித்தவாயுவையும் வராமல் பாதுகாக்கிறது.

·         மூலநோய், நாட்பட்ட கிராணி போன்றவற்றிக்கு மாமருந்து உள்ளது.

முருங்கை கீரை :


·             கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை  

        உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக வலிகள் குறைக்கிறது.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்பு த்தையும் மற்றும்  வயிற்று வலியையும் சரி செய்கிறது.

·         முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சோ்த்து சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டையும் சேர்த்து, நெய்விட்டு கிளறி சாப்பிட்டு வரவும்.   இரத்தசோகை நீக்கும்

·         முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் குணமாகும் என்று மருந்துவம் கூறுகிறது.

·         முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசத்தை சரி செய்யும்.


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT