கடன் பிரச்சனை தீர வேண்டுமா!! வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள் !!!

 கடன் பிரச்சனை தீர வேண்டுமா!! வாராஹி அம்மன் வழிபாடு செய்யுங்கள் !!!

வாராஹி அம்மன் பற்றி சுவராஸ்சிய தகவல்கள்!!!!

வாராஹி அம்மனின் வரலாறு

அம்மனின் வழிப்பாட்டு முறை

அம்மனின் மூல மந்திரம்

வழிப்படும் நாள் மற்றும் நேரம்

வாராஹி அம்மனின் வழிப்பாட்டினால் நமக்கு ஏற்படும் நன்மைகள்

மேலும் சில தகவல்களை இப்பதிவில் காண்போம்!!!

வாராஹி அம்மன் பெயரை கேட்டால் சில பேருக்கு அச்சம் ஏற்படும்

வாராஹி அம்மனின் முக அம்சம்  பன்றி முகம்யுடையதாய் இருக்கும். ஆனால் அவளிடம் சரண்டைந்துவிட்டால்  உடனடியாக வந்து நமது கஷ்டங்களையும், வேதனைகளையும் தீர்த்து வைக்கும் குணம் உடையவள்.

வராஹி அம்மனின் குணம்

வாராகி அம்மனுக்கு மிருக பலமும், தேவ குணமும் பொருந்தியவள்

அவளிடம் சரண்டைந்தவர்களுக்கு என்று துணை நிற்பாள்.

வராஹி அம்மனின் வரலாறு

வாராகி அம்மன் சிவன்,விஷ்ணு,சக்தி  என்று மூன்று தெய்வங்களின் அம்சங்களை கொண்டவள்.



அம்மன் வழிப்பாட்டால் ஏற்படும் நன்மைகள்

பில்லி சூன்யம்   என்று நம் எதிரிகளால் ஏற்படும் துன்பத்திலிருந்து காப்பவள்.நம் மனதில்  தெளிவு ஏற்படும்.வாழ்வின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணையாக வாராகி அம்மன்  வழிபாடு இருக்கும். நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர முடியும்.உண்மைக்கு என்று துணை 

நிற்பவள்.

வாராகி அம்மன் சப்த கன்னிமார்களில் இவளும் ஒருவராக  இருக்கிறாள். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீபூவராகபொருமள் கோவிலில் உள்ள சப்த கன்னிமார்களுக்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன.

வழிபடும் நேரம் , திதி மற்றும் நாள்

ஒவ்வொரு மாதம் தேய்பிறை பஞ்சமி திதியில்  இரவு  9 மணி முதல் 10 மணி வரை

பிடித்த நிறம்

வாராஹி அம்மனுக்கு அணிவிக்க

சிவப்பு நிறம் – காரிய தடைகள் நீங்கும்

மஞ்சள் நிறம் – வீட்டில் மங்களங்கள நிகழ்வுகள் உண்டாகும்

வெள்ளை நிறம் – கல்வி சிறந்து விளங்க

வாராகி அம்மன் புகைப்படம் , விக்ரகம் இல்லாவிட்டாலும்   வீட்டில் கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி அமர்ந்து வழிப்படலாம்.

தீபம் ஏற்றும் முறை

எந்த தெய்வமாக இருந்தாலும் அகல்விளக்கு ஏற்றி மனதார பக்தியுடன்  நாம் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் வேண்டிக்கொண்டால்  அது கண்டிப்பாக நிறைவேறும் என்பது நிதர்சனமான உண்மை.

தீபத்திற்கு இலுப்பை எண்ணெய் உபயோகித்தால் மிகச்சிறந்த்து.

கிழக்கு நோக்கி பச்சை நிற  துண்டில்அமர்ந்து வடக்கு நோக்கி தீபம் ஏற்ற வேண்டும்.

வாராஹி அம்மனின் வழிப்பாட்டினால் நமக்கு ஏற்படும் நன்மைகள்

நாம் நினைக்கும் காரியம் வெற்றிடைய ஐந்து பஞ்சமி அல்லது ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் இரண்டாக உடைத்து அதில் நெய் விளக்கு ஏற்றி வாராஹியை வழிபட வேண்டும்,

வாராஹி அம்மன் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் விவரம்

சப்த கன்னியர்களில் ஒருவராக வராகி அம்மனை வழிபடும் கோயில்களைத் தவிர, வராகி அம்மனை பிரதான தெய்வமாக வணங்கப்படும் குறிப்பிடத்தக்க பல  கோயில்களும் உள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம்

பிரகதீஸவர்ர் கோவில்(பெரியகோவில்)

வாராஹி அம்மன் சன்னதி தனியாக உள்ளது.

ராஜராஜசோழன் போருக்கு செல்லும் வராஹிஅம்மன் வழிபாடு செய்து விட்டு செல்வர் .

திருப்பூர் மாவட்டம்

செங்கப்பள்ளி என்ற ஊரில் அருள்மிகு செரைக்கன்னிமார் கோவில்.

விழுப்புரம் மாவட்டம்

 சாலாமேடு என்ற ஊரில் அஷ்டவராகி கோயில்

இக்கோவில் தான் வராஹிஅம்மனுக்கு   உலகிலேயே அமைக்கப்பட்ட முதல் கோவில்  ஆகும்.

நாகப்பட்டினம் மாவட்டம்

வழுவூர் வீரட்டேசுவரர் கோயில்

கடலூர் மாவட்டம்

நெல்லிக்குப்பம் எனும் ஊரில் செல்லியம்மன் கோவில்(ஊர் வழிக்கப்படிஅழைக்கப்டுகிறது)

(பஞ்சமி திதியில் மஹா யாகம் ,பூஜை நடைபெற்று வருகிறது.)

தூத்துக்குடி மாவட்டம்

எட்டயபுரத்திற்கு அருகில் இருக்கும் என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி

திருவாரூர் மாவட்டம்

தியாகராஜர் கோவிலில் சப்தமாதா தனி சன்னதியாக சப்தமாதாகள்

இராமநாதபுரம் மாவட்டம்

உத்தரகோசமங்கை மங்கலநாதர் திருக்கோயில்

இலங்கை

 யாழ்ப்பாணம் மாவட்டம், கொக்குவில் மேற்கு, கொக்குவில் உள்ளது.

திருச்சி மாவட்டம்

எழில்நகர் அருள்மிகு லெட்சுமி கணபதி ஆலயம்.

பிடித்த உணவு

வெள்ளை மொச்சை உடன் தேனி கலந்து

சுண்டக்கடலை

எள்  மற்றும் வெல்லம் உருண்டை

சர்க்கரைவள்ளிகிழங்கு

மாதுளைபழம்

தேன்

உளுந்துவடையில் மிளகு சேர்ந்த வடை

 


வாராகி அம்மனை மனதார வணங்கி  நமது கஷ்டங்களை போகுவோம்!!! நன்றி

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT