வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு

 

வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு



வங்கியில் கணக்கு வைத்திருப்வர்களின்  மொபைல் எண்ணிற்கு அவர்களது வங்கியில்  இருந்து அனுப்ப்ப்படுவது போல் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப்ப்டுகிறது. அந்த குறுஞ்செய்தியில் அவர்களது வங்கிக் கணக்குடன்   PAN CARD  விபரங்கள் இணைக்க வேண்டி இருப்பதால் இந்த லிங்கில் சென்று ஆன்லைனில் அப்டேட் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டு  அதில் ஒரு URL LINK   உள்ளது.  அந்த  குறஞ்செய்தியை பார்ப்பவர்கள்  அதனை வங்கியில்  WEBSITE போல் உருவாக்கப்பட்ட  மோசடியான PHISHING WEBSITE ஐ  திறக்கிறது. அது பார்ப்பதற்கு வங்கியின் பெயரில் வங்கியின்  வெப்சைட் போன்றே காணப்படும்.  அதில்  அவர்களின்  வங்கி கணக்கு எண்   ATM CARD NUMBER, OTP   போன்ற  விவரங்களை பூர்த்தி செய்யுமாறு கோரப்படுகிறது. அதனை வாடிக்கையாளர்கள் பூர்த்தி  செய்தவுடன் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம்  மோசடியாக  எடுக்கப்படுகிறது.

     எந்த  வங்கியும்  தனது வாடிக்கையாளருக்கு பான்கார்டு  LINK செய்யவும்  அல்லது KYC UPDATE    செய்யவும் மெசேஜ் மூலமாக லிங்க் எதுவும் அனுப்புவதில்லை. இதனை அறியாத வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது. எனவே வங்கி கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் இந்த மோசடி நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT